ப்1ரஸாதே3 ஸர்வது3:கா2னாம் ஹானிரஸ்யோப1ஜாயதே1 |
ப்1ரஸன்னசே1த1ஸோ ஹ்யாஶு பு1த்3தி4: ப1ர்1யவதி1ஷ்ட1தே1 ||65||
ப்ரஸாதே—-தெய்வீக அருளால்; ஸர்வ—--அனைத்து; துஹ்கானாம்—-- துக்கங்களின்; ஹானிஹி—- -அழிவு; அஸ்ய--—ஒருவரின்; உபஜாயதே—-எழுகிறது; ப்ரஸன்ன-சேதஸஹ—--அமைதியான மனதுடைய; ஹி—-- நிச்சயமாக; ஆஶு----விரைவில்; புத்திஹி—--புத்தி; பர்யவதிஷ்டதே—-- உறுதியாக நிலை நிறுத்தப்படுகிறது
BG 2.65: தெய்வீக அருளால் அனைத்து துக்கங்களும் முடிவடையும் அமைதி வருகிறது, அமைதியான மனதுடைய ஒருவரின் புத்தி விரைவில் கடவுளிடம் உறுதியாக நிலைநிறுத்தப்படுகிறது.
Start your day with a nugget of timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
கருணை என்பது ஒரு நபரின் ஆளுமைக்குள் பெருகும் தெய்வீக ஆற்றல். அருளால், நித்திய, அறிவு, ஆனந்த கடலான (சத்-சித்-ஆனந்த) கடவுள் தனது தெய்வீக அறிவையும், தெய்வீக அன்பையும், தெய்வீக பேரின்பத்தையும் தருகிறார். இது துருவ நட்சத்திரத்தைப் போலவே புத்தியையும் கடவுளின் அன்பு, பேரின்பம் மற்றும் அறிவில் நிலைநிறுத்துகிறது. கடவுளின் அருளால், தெய்வீக பேரின்பத்தின் உயர்ந்த சுவையை நாம் அனுபவிக்கும் போது, சிற்றின்ப மகிழ்ச்சிக்கான கிளர்ச்சி அணைந்துவிடும். ஜடப் பொருள்களின் மீதான அந்த ஏக்கம் நின்றுவிட்டால், ஒருவன் எல்லாத் துன்பங்களையும் தாண்டி, அமைதி அடைகிறான். அந்த அக நிறைவு நிலையில், கடவுள் மட்டுமே மகிழ்ச்சிக்கு ஆதாரம் என்றும் ஆன்மாவின் இறுதி இலக்கு என்று நுண்ணறிவு உறுதி செய்கிறது. முன்பு, சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள அறிவின் அடிப்படையில் மட்டுமே புத்தி இதை ஏற்றுக்கொண்டது, ஆனால் இப்போது அது பூரண அமைதி மற்றும் தெய்வீக ஆனந்தத்தின் அனுபவத்தைப் பெறுகிறது. இது புத்தியை அனைத்து சந்தேகங்களை கடந்து நம்பிக்கையை வளர்க்க உதவுகிறது, மேலும் அது கடவுளில் நிலையாக அமைந்துள்ளது.